
சில கணத்துளி
நேரமதில்
மனம் கொண்ட
வாஞ்சை
மறுத்திடவோ
புரிந்திடவோ
இயலா நிலையில்
யானுமே
(எனை)
ஆதங்கப்படுத்திப்
போவதன்
இயல்பிசை சுரம்
எதுவோ....?
வன்முறையோ......?
இல்லையேல்
வளைந்து செல்லும்
வழியிதுவோ......?
வேறுப்படுத்தியறியும்
வகையறியாது
யானும்
தவிப்பதன்
தகுசெயல் தான்
ஏனோ.......?