திங்கள், 28 ஜூன், 2010

தனக்குள்ளே........!



சில கணத்துளி
நேரமதில்
மனம் கொண்ட
வாஞ்சை
மறுத்திடவோ
புரிந்திடவோ
இயலா நிலையில்
யானுமே
(எனை)
ஆதங்கப்படுத்திப்
போவதன்
இயல்பிசை சுரம்
எதுவோ....?
வன்முறையோ......?
இல்லையேல்
வளைந்து செல்லும்
வழியிதுவோ......?
வேறுப்படுத்தியறியும்
வகையறியாது
யானும்
தவிப்பதன்
தகுசெயல் தான்
ஏனோ.......?