திங்கள், 28 ஜூன், 2010

கலங்கமுற்ற நிலா


புரிந்து போன
மன‌
ஆழ் இடுக்கைக்குள்
புதைந்து போன‌
நியாயங்களைத்
தடவிய‌
பொழுதுகள்.....!
எடுத்தியம்பும் வழி
அடுக்கிய‌
பயண‌ங்கள் என
பாதையறிய‌
முனைகிறது வயது....!
எதுவுமே
வழி நெடுகிலும்
வகை சொல்லிடும்
புலனெதுவோ....?
தடுத்திடும் அர்த்த‌
இருப்பு
மாயையதன்
நிஜம் உணர‌
நித்தமொரு
சங்கடம்.........!
உணர மறுப்பின்
புலனதில்
மழைச் சாரல்.......!
வழி மீறிய‌
வலி சுமந்த‌
நேசக்கர‌மதில்
எண்னணற்ற‌
கயிறு திரிப்புகள்....!
கலந்தது எதுவுமா....?
என வினா
தடவும் விடைகள்தான்
ஏது.................?