
திருந்திய
திருத்திய
வசன
வியாக்கியானம்
தனை தன்னுள்
செதுக்கிய
அகராதி.....!
புரியாத மடலதன்
மென்மை
கொணர்ந்து
மடல் மயக்கிய
விதண்டாவாதம்.......!
மை தீண்டிய
விரல் இடுக்கை
புலனாகாத
தீண்டல் கொடுமைகள்
கருவி நனைந்த
இயல்பிருப்புக்கள்....!
மென்மைக்குள்
மேன்மை புலனாக
மறுத்திடும்
மர்மம் நீக்கும்
வல்லமை.......!
தீண்டாத பார்வையதில்
பதிந்திடும்
அர்த்தப் பதிவுகள்....!
சிதைந்த சில்மிஷ
சுவாசகங்கள்....!
மறுத்திடும்
புன்னகையிலும்
விலை பேச
முனையும்
ஓர் வர்க்கம்
என்றோ மடியும்
(அது) நமை
உணர்ந்து.......!
அன்றுண்டு
அதற்கும் ஓர்
பதிலீடு........!










