திங்கள், 21 மே, 2012

நானும் ஓர் கடனாளி


ஈரைந்து மாதங்கள் (ன்)னை
கருவில் சுமந்தவள்
(நான்)
கல்லறை செல்லுமட்டும்
இதயவறையில் சுமப்பவள்..!
கருவறையில் சுமந்ததற்காய்
கூடையை இன்று
தலையிலே சுமக்கிறாள்..!
நான் பாடசாலை போக
பள்ளம் மேடு ஏறுகிறாள்..!
நான் காலில் செருப்பணிய
நீயோ முள்ளிலே
காலை வைத்தாய்...!
நான் பட்டம் பெற
நீ மட்டம் எடுக்கிறாய்...!
நான் வாழ்வில்
கரையேர
நிரை பிடித்தாய்...!
குடை பிடித்து நான் செல்ல
குளிரிலே குளிர் காய்கிறாய்.!
போதுமம்மா....
நீ பட்ட துயருக்கு விலைதான்
என்னம்மா.....!!!
என்ன பந்தமிது....!
ஏனிந்த உறவு....!
உன் உள்ளம் இங்கு
வருமா யாருக்கும்...?
உனக்காக வாழ்வேன்
உன் இயந்திர கைகளுக்கு
ஓய்வளிப்பேன்..!
உறுதி கூறுகிறேன்
உன் வேதனையின் சாட்சியாய்................!!!!!

என் வானவில்


பிடித்த மொழி -மௌனம்

நிதம் யாசிப்பது -தனிமை

தினம் யோசிப்பது -தொலைந்த தேடல்கள்

இலயிப்பது -இயற்கையில்

வசப்படுவது -விதியில்

வாசம் செய்வது -இசையில்

கவலைப்படுவது -நேற்றைய வெற்றிகள்

எதிர்பார்ப்பது -நிதம் ஒரு தோல்வி

நிலை பெற நினைப்பது -எழுத்தில்

பரவசமடைவது -நட்சத்திர கண் சிமிட்டலுக்கு

பிடித்த தோல்வி -கை நழுவிய பட்டாம்பூச்சி

பிடித்த உணவு -மனதோடு பரிமாறப்பட்டது

பிடித்த மழை -கண்ணீர்

கவர்ந்த இடம் -தாயின் கருவறை

பிடித்த பரிமாறல் -மனம் விரிந்த புன்னகை

ஏங்குவது -பார்வைகளுக்கு

தொலைத்தது -சில உளறல்கள்

தேடுவது -சில மர்மங்கள்

வேண்டுவது -துன்பங்கள்

கொள்ளை போவது -மழலை இதழ் விரிப்பில்

கனவு காண்பது -இயலாதவை பற்றி

துவண்டு போவது -சில(ர்) வார்த்தைகளுக்கு

சுவாசிக்க யாசிப்பது -சுதந்திரம்

பிடித்த நிறம் -பசுமை

சந்தோஷப்படுவது -அனுபவங்களை எண்ணி

சங்கடப்படுவது -சில பார்வைகளுக்கு

கர்வம் கொள்வது -நட்பை எண்ணி

பிடித்த நூல் -அனுபவம்

ஆசைப்படுவது -மழைத்தீண்டல்களுக்கு

கவர்வது -ஆத்மார்த்த அன்புக்கு

திருப்தி கொள்வது -சிந்திப்பில்

கொடுக்க விரும்பாதது -சொந்தங்களை

கேட்க விரும்பாதது -மனங்கசங்கிய மன்னிப்பு

சிறந்த வாசகம் -எதுவும் உன்னிலே

ஆண்டவனிடம் யாசிப்பது -நிரந்தர மரணம்

வரவேற்பது -சங்கடங்கள்

என்னிலே எனை ஆள்வது -மரணந்தாண்டிய மௌனம்

தவமின்றி கிடைத்தது -கருவறை பந்தம்

இலட்சியம் -இதயங்களில் வாழ்வது

கால் நனைப்பு

ஆ...ஆ... மெல்ல முணங்களுடன் இறுகி மூடிக் கிடந்த இமைகளை திறக்க முயல்கிறேன்.  விண் விண் என்ற தெறிப்பினை உணர்ந்தபடி யாரோ என் இமைகளை மூடி தைத்து விட்டது போன்ற உணர்வுடன் மெல்ல மடல்களை விரிக்கிறேன்.

 சில கண சுய சாதனைக்கு பின் நான் தற்போது ஒர் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.

கட்டிலில் ஏதோ ஓர் கண்காடசி பொம்மை போல் கிடத்தப்பட்டுள்ளேன்.

என்னைச் சூழ அம்மா அப்பா. சுரேஸ் அண்ணா சுப்பு குட்டி எல்லோரும் கண் கலங்கிய படி நிற்கின்றனர்.

கைகளை இழுக்க முயன்று வலியுடன் எனக்கு சேலைன் ஏற்றப்பட்டுள்ளதை உணர முடிகிறது என்னால்.

அம்மா என்னருகில் கண்களை கசக்கியபடி வந்து கைகளை தடவிக்கொடுக்கிறாள். அப்பா என் தலைகோதி 'என்னம்மா' எனபது போல ஆறுதல் படுத்த முயல்கிறார்.

 தீடிரென ஹரி... ஹரி.... ஒனக்கு என்னாச்சு...??? யாரோ ஓர் ஆண் குர‌ல் என்னை தொட்டு எழுப்ப முயல்வதாக உணர்கிறேன்.

நான் ப‌ய‌ந்து "அப்..பா... அப்பா.... யாரப்பா...எனக்கு பயமா இ...ருக்.குப்..பா அப்பா.." என அப்பாவை அணைத்து கொண்டேன்.

"இல்லம்மா......இல்ல நீ பயப்படாத நீ தூங்கு அப்பா இருக்குறே இல்ல.நா பாத்துகுறேன்" என்று அப்பா சொல்லிகொண்டிருக்கும் போதே

 "என்ன ஹரிணி... என்னய ஒனக்கு தெரியலயா…..ஹரிணிம்மா என்னாச்சு ஒனக்கு...ஹரிம்மா.... “மீண்டும் அதே குரல்

சுரேஸ் அண்ணா குரலுக்கு உரிமையாளரை "வாங்க சார் நீங்க‌...அவங்கள டிஸ்டர்ப் பண்னாம..." என்று வெளியே அழைத்து செல்கிறார்

. "ஹரிணி என்ற ஒலி இப்போது தூரமாய் ஒலிக்கிறது.நான் மெதுவாக என் கண் மடல்களை மூடி அப்பா மடியில் தலைவைத்து கண்ணயர்கிறேன் பழைய நினைவுகளாய் நேற்றைய இர‌வை மீட்டிய படி....

 "அப்பா அவரு நல்லா படிச்சவரு..உங்களுக்கு உங்க மக மேல நம்பிக்கை இருந்தா சரின்னு சொல்லுங்கப்பா...." என்று நான் என்னவன் நிமலேஷ்காக அப்பாவிடம் வாதாட அப்பாவோ தான் சாக போவதாக சொல்ல அம்மா எனை அடித்தபடி அழுது கீழே விழ திரைப்பட காட்சி போலானது.

 நான் யாருக்காகவும் முடிவெடுக்க முடியாது போக என்னதான் தலைமைத்துவம் பற்றிய ஹென்றி மின்ஸ்பெர்க்கின் Disturbance Handler கொள்கையை ஆதரித்தாலும் தூக்க மாத்திரைகளை அள்ளி வாய்க்குள் போட்டேன்....

 இன்று…………………..

நிமலேஷ் உன்னய என்னால மறக்க முடியாது. இருந்தும் 22 வருஷம் கண் போல் காத்து வந்த பெற்றோர் என்று வாறப்ப உன்னய நா விட்டுக் கொடுத்துட்டேன் நிமலேஷ்....

பிரிவினால என் காதல் இன்னும் வலுவடைய கூடாது. அதால தான் இரவு பாதியும் தூங்காத உன் கண்கள பார்த்த பிறகும் நீ யார்னு கேட்டேன்..

நிமலேஷ் நம் காதல் உண்மை. உன்னய நா மறக்க முடியாம தவிக்கிறேன்.

இருந்தாலும் என்னய இந்த பாவிய நீ மறக்க முயற்ச்சிபாய்கிற நம்பிக்கையில தான் இந்த முடிவு...

மன்னிச்சிடாத நிமலேஷ் என்னய. இந்த ஹரிய மறந்துடு....!!!!

கண்களில் வழிகிற கண்ணீர் சொட்டுக்களை அப்பாவின் அன்புக் கரங்கள் துடைக்கின்றன.